சாலையில் முந்தி செல்ல வழி விடாத அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல் ; தாக்கிய கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

0 3128
சாலையில் முந்தி செல்ல வழி விடாத அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்

மதுரையில், சாலையில் முந்தி செல்ல வழி விடாத அரசு பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரையில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசுப்பேருந்து காளவாசலைக் கடந்த போது, பின்னால் வந்த இனோவா காரின் ஓட்டுநர் முந்தி செல்ல வழி விடும்படி தொடர்ந்து ஹாரன் அடித்து வந்துள்ளார்.

போக்குவரத்து நெரிசலான சாலையில் அரசுப்பேருந்து ஓட்டுநரால் வழி விட முடியாததால் ஆத்திரமடைந்த இனோவா கார் ஓட்டுநர், அரசுப்பேருந்தை வழி மறித்து காரை நிறுத்தி விட்டு, தனது கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து பேருந்து கண்ணாடியை உடைத்ததுடன், ஓட்டுநரையும் ஆபாசமாகத் திட்டி பைப்பால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதை கண்டித்து அடுத்தடுத்த பேருந்துகளில் வந்த ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் பொதுமக்கள் காரில் இருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் வருவதற்குள் காரில் தப்பி சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments