நவ.25 முதல் 27 வரை தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு ; இந்திய வானிலை ஆய்வு மையம்

0 9011
நவ.25 முதல் 27 வரை தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு

வரும் 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாக தெரிவித்த அம்மையம், இது அடுத்த 5 நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நெருங்கும் என குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக, தமிழ்நாட்டில் மழை பெய்வதற்கான வாய்ப்பு தொடர்வதாக குறிப்பிட்டுள்ள வானிலை மையம், வரும் 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments