மழை பாதிப்பை ஆய்வு செய்ய தமிழகம் வந்த மத்திய குழு தலைமைச் செயலாளருடன் ஆலோசனை

0 2418
மழை பாதிப்பை ஆய்வு செய்ய தமிழகம் வந்த மத்திய குழு தலைமைச் செயலாளருடன் ஆலோசனை

தமிழ்நாட்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்னை வந்த மத்திய குழுவினர், தலைமைச் செயலாளர் மற்றும் பல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

7 அதிகாரிகளை கொண்ட இக்குழு தனித்தனியாக சென்று, நாளை மற்றும் நாளை மறுநாள் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட 11 மாவட்டங்களுக்கு செல்ல உள்ளனர். நாளை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு குழுவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு குழுவும் ஆய்வு செய்ய உள்ளது. மேலும், நாளை மறுநாள், கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஒரு குழுவும், வேலூர், ராணிப்பேட்டைக்கு மற்றொரு குழுவும் செல்ல உள்ளது.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் பல்துறை செயலாளர்களுடன் குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர். இதனை அடுத்து, ரிப்பன் மாளிகையில் சென்னையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த புகைப்படங்களை பார்வையிட்ட மத்திய குழு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியுடன் ஆலோசனை மேற்கொண்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments