திருச்சியில் தன் குருவின் முன்னிலையில் பிரியங்கா என்ற பெண் அகோரியை திருமணம் செய்த மணிகண்டன்!

0 6764

திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில், தன் குருவின் முன்னிலையில் மணிகண்டன் என்ற அகோரி கல்கத்தாவைச் சேர்ந்த பிரியங்கா என்ற பெண் அகோரியை, இன்று அதிகாலையில் திருமணம் செய்தார்.

காசியில் பயிற்சி பெற்ற மணிகண்டன் என்ற அகோரி அப்பகுதியில், ஜெய் அகோரகாளி சிலையைப் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அவரிடம் அகோரி பயிற்சி பெற்று வந்த கல்கத்தாவைச் சேர்ந்த பிரியங்கா என்ற பெண் அகோரியை, தன் குருவான மதுரை பால்சாமி முன்னிலையில் தன் உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு, அகோரி கோலத்தில் திருமணம் செய்தார்.

திருமணத்தின் போது சக அகோரிகள் தமரா மேளம் அடித்து, சங்கொலி எழுப்பி ஹர ஹர மகாதேவா என்று முழங்கினார்கள்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments