விழுப்புரம், கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை!

0 2794

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கி, மறுவாழ்வுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும்படி தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று தென்பெண்ணையாற்றில் ஒன்றேகால் இலட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டது தான் பல ஊர்கள் வெள்ளத்தில் மூழ்கியதற்குக் காரணம் என்றும், இந்த அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்கிற தகவல் முன்கூட்டித் தெரிவிக்கப்படவில்லை என்றும் மக்கள் கூறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments