புதிதாக 10 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி ; தமிழ்நாடு அரசு

0 3846
புதிதாக 10 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி

வரும் 2022 - 23ஆம் கல்வியாண்டு முதல் 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், 9 இடங்களில் இருபாலர் மற்றும் ஒரு இடத்தில் மகளிர் கல்லூரியும் தொடங்க அனுமதி அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

அதன் படி, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோயிலூர், ஈரோடு மாவட்டம் தாளவாடி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் இருபாலர் கல்லூரிகளும், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் ஒரு புதிய மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் தொடங்க அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments