இதுவரை 30 ரஃபேல் விமானங்கள் இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், 2022 ஏப்ரலுக்குள் மேலும் 6 ரஃபேல் விமானங்கள்..!

0 3215

இதுவரை 30 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவிற்கு வழங்கப்பட்ட நிலையில், எஞ்சிய 6 விமானங்களும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் வழங்கப்பட்டு விடும் என இந்தியாவுக்கான ஃபிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லெனைன் தெரிவித்துள்ளார்.

கொரோனா காலத்திலும், தங்கள் நாட்டினர் இரவு பகலாக உழைத்து இந்தியாவிற்கு சரியான நேரத்தில் ரஃபேல் விமானங்களை வழங்கியதாகவும், இது பெருமையான விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்தியா - பிரான்ஸ் நாடுகள் பல தசாப்தங்களாக பாதுகாப்புத்துறையில் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதாகவும் இம்மானுவேல் லெனைன் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments