விவசாயிகளின் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை - ராகேஷ் திகாயத்

0 3168

புதிய வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் எனப் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.

மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாகப் பிரதமர் மோடி அறிவித்தது பற்றிக் கருத்துக் கூறிய அவர், விவசாயிகளின் போராட்டம் முடிவடையவில்லை என்றும், போராட்டத்தில் 750 விவசாயிகள் உயிர்த் தியாகம் செய்த பிறகு அரசு விழித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இன்னும் சட்டங்கள் திரும்பப் பெறப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், நாடாளுமன்றத்தில் திரும்பப் பெறும் வரை போராட்டம் நீடிக்கும் என்றும், அதன்பின் தான் வீடு திரும்ப முடியும் என்றும் தெரிவித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments