3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் விவகாரம் : நாடாளுமன்றத்தில் முறையான நடவடிக்கை தேவை - முதலமைச்சர்

0 2686

மூன்று வேளாண் சட்டங்களையும் முறையாக திரும்பப் பெற, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும், என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இன்னும் சில நாட்களில், விவசாயிகளின் போராட்டம் ஓராண்டை எட்டவுள்ள நிலையில், போராட்டம் வேகமெடுக்கும் என்பது தெரிந்தோ, அல்லது சில மாநில சட்டசபை தேர்தல்களை மனதில் வைத்தோ, இத்தகைய முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது, என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், காரணம் எதுவாக இருந்தாலும், திரும்பப் பெறும் முடிவு வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,  போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிப்பதுடன், விவசாயிகள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும், என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments