2 நாட்களுக்கு தேவையான பொருட்களை இருப்பு வைக்கவும் ; பொது மக்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்

0 4338
2 நாட்களுக்கு தேவையான பொருட்களை இருப்பு வைக்கவும்

அதிக கனமழை எச்சரிக்கை காரணமாக, அடுத்த இரு நாட்களுக்கு தேவையான பால், குடிநீர், உணவு மற்றும் காய்கறிகளை, பொதுமக்கள் இருப்பு வைத்துக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

நவம்பர் 18-ம் தேதி, சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும், என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், இவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீரை வெளியேற்ற, 600 மோட்டார் பம்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மழை நேரத்தில் மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் அருகே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், நீர்நிலைகளுக்கு அருகே நின்று செல்பி எடுக்க வேண்டாம், என்றும் மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments