இரவிலும் உடற்கூறாய்வு செய்யலாம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி

0 3854

பொருத்தமான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ள மருத்துவமனைகளில் இரவிலும் உடற்கூறாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,  கொலை, தற்கொலை, பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்தோரின் சடலங்கள், அழுகிய சடலங்கள், மரணத்தில் சந்தேகம் நிலவும் சடலங்கள் போன்றவற்றில் இரவு வேளைகளின்போது உடற்கூறாய்வு மேற்கொள்ளக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவில் மேற்கொள்ளப்படும் அனைத்து உடற்கூறாய்வுகளையும் காணொலியாகப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments