ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா வந்த ஆல் ரவுண்டர் ஹார்திக் பாண்ட்யாவிடம் இருந்து 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரங்களை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள்!

0 5140

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா வந்த ஆல் ரவுண்டர் ஹார்திக் பாண்ட்யாவிடம் இருந்து 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரங்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

ஐபிஎல் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்ற அவர் இந்தியா திரும்பினார். அவரைச் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் கொண்டு வந்திருப்பது தெரியவந்தது.

மரகதக் கற்களாலும், பிளாட்டினத்தால் செய்யப்பட்டதுமான இந்தக் கைக்கடிகாரங்களுக்கு போதிய ஆவணங்கள் இல்லாததால் அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments