கோவையில் காதலனுடன் பேச முடியாத விரக்தியில் பிறந்தநாளன்று இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.!
கோவையில் காதலனுடன் பேச முடியாத விரக்தியில் பிறந்தநாளன்று இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிங்காநல்லூர் அருகே இருகூர் ராம் நகர் 5வது வீதியை சேர்ந்த சோமு ராஜ் என்பவரின் மகள் சுவாதி.இவர் சேலம் மாவட்டம் நாயக்கன்பட்டியில் பாட்டி வீட்டில் இருந்த போது அதே ஊரைச் சேர்ந்த இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.
இந்த காதல் விவகாரத்தை தெரிந்து கொண்ட சோமுராஜ் மகளை மீண்டும் கோவையில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனால் காதலனுடன் பேச முடியாமல் தவித்த சுவாதி பிறந்த நாளான நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் சுவாதி எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றி உள்ளனர்.
Comments