புதுக்கோட்டையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

0 10206

புதுக்கோட்டையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைதான இளைஞருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் வீட்டில் தனியாக இருந்த 12 வயது மாணவியை திருச்சி மாவட்டம் பிச்சாண்டார்கோவில் பகுதியை சேர்ந்த மாதவன் என்ற இளைஞர் அடித்து, தாக்கி பாலியல் தொந்தரவு செய்திருக்கிறான்.

அவனை கைது செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் வழக்கு பதிந்தனர். இது குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த இளைஞரை குற்றவாளி என அறிவித்து, இயற்கை மரணத்தை எட்டும் வரை ஆயுள் தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. 

 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments