இஸ்ரேல் சென்றடைந்தார் ராணுவத் தளபதி நரவனே ; இரு நாட்டு ராணுவ ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை

0 2085
இஸ்ரேல் சென்றடைந்தார் ராணுவத் தளபதி நரவனே

ராணுவ தளபதி நரவனே ஐந்து நாள் பயணமாக இஸ்ரேல் சென்றடைந்தார். வரும் 19ஆம் தேதி வரை அரசு முறைப் பயணம் மேற்கொள்ளும் அவர் அந்நாட்டின் மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

மேலும், இருதரப்பு பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாகவும் ராணுவ கூட்டுறவை முன்னெடுத்து செல்வது தொடர்பாக இஸ்ரேல் ராணுவ அதிகாரிகளுடன் நரவனே கலந்தாலோசிக்க உள்ளார்.

அண்மையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமார் ஆகியோரும் இஸ்ரேல் சென்றிருந்தனர். இந்நிலையில், லாட்ரன் நகரில் இஸ்ரேல் ராணுவம் சார்பில் அளிக்கப்பட்ட மரியாதையை ராணுவ தளபதி நரவனே ஏற்றுக்கொண்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments