இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேர் விடுதலை

0 2305
இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேர் விடுதலை

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேரைப் பருத்தித்துறை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

அக்டோபர் மாதத்தில் நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் 23 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இலங்கைப் பிரதமரின் செயலாளர் செந்தில் தொண்டமான், மீனவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இந்நிலையில் மீனவர்கள் 23 பேரும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது, அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

விடுவிக்கப்பட்ட மீனவர்கள் 23 பேரையும் ஓரிரு நாட்களில் தமிழகத்துக்கு அனுப்பி வைக்க இந்திய தூதரக அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments