பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் சம்பா பயிரை இன்றுக்குள் காப்பீடு செய்ய அறிவுறுத்தல் - உழவர் நலத்துறை

0 1833

பிரதமரின் பயிர்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா பயிரை இன்றுக்குள் காப்பீடு செய்யுமாறு விவசாயிகளை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அறிவுறுத்தி உள்ளது.

நடப்பாண்டில் 20 லட்சத்து 95 ஆயிரம் ஏக்கர் நிலம் காப்பீடு செய்யப்பட்டு, சுமார் 10 லட்சம் விவசாயிகள் திட்டத்தில் இணைந்து உள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இன்றுடன் சம்பா பயிர் காப்பீடு திட்டம் முடிவடைய உள்ளதாகவும், இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பொது சேவை மையம், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை அணுகி பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments