குறைதீர்ப்பு துறைகள் ஒருங்கிணைத்து 'முதல்வரின் முகவரி' என்ற துறை உருவாக்கம் - அரசாணை வெளியீடு

0 2565

முதலமைச்சரின் குறைதீர்ப்பு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு 'முதல்வரின் முகவரி' என்ற புதிய துறை உருவாக்கி அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை, முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு புதிய துறை உருவக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

'முதல்வரின் முகவரி' துறையில் மனுக்களுக்குத் தீர்வு காண ஒற்றை இணையதள முகப்பு பயன்படுத்தப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த புதிய துறைக்கு சிறப்பு அலுவலராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷில்பா பிரபாகர் சதிஷ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments