மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு

0 3095

சென்னை பெருநகர மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கி உதவிட முன்வருமாறு  தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

அரிசி, பருப்பு, எண்ணெய், பாய், , தலையணை, சோப்பு போன்ற பொருட்களை தொண்டு நிறுவனங்கள் வழங்க முன்வந்தால் சென்னை ஷெனாய் நகர் ஜெ.ஜெ.உள்விளையாட்டு அரங்கிற்கு, நேரில் கொண்டு வந்து வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழுகும் பொருட்கள், சமைக்கப்பட்ட உணவு வகைகள், பழைய பொருட்கள் வழங்குவதை தவிர்க்குமாறு, சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்தள்ளது.

நிவாரணப் பணிகளில் ஈடுபட விரும்பும் தன்னார்வலர்கள் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் பதிவு செய்யலாம்  என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments