மணிமுக்தா அணையில் இருந்து நொடிக்கு 1567 கன அடி நீர் திறப்பு ; கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

0 2050
மணிமுக்தா அணையில் இருந்து நொடிக்கு 1567 கன அடி நீர் திறப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணிமுக்தா அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றங்கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

36 அடி உயரமுள்ள மணிமுக்தா அணையில் நீர்மட்டம் 34 அடியை எட்டியுள்ள நிலையில் மதகுகள் வழியாக நொடிக்கு ஆயிரத்து 567 கன அடி நீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் என்பதாலும் மணிமுக்தா ஆற்றின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments