கனமழை எதிரொலி ; செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 2000 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

0 2278
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 2000 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து நின்றுபோன நிலையிலும் ஏரியில் இருந்து தொடர்ந்து இரண்டாயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி முழுவதும் நிரம்பியுள்ளது. இதனால் வெள்ள அபாயத்தைத் தவிர்க்கும் வகையில் ஏரியில் இருந்து இரண்டாயிரம் கன அடி நீர் அடையாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

ஏரிக்கு நீர்வரத்து முற்றிலும் நின்று போன நிலையிலும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதனால் ஏரியில் இருந்து மதகு வழியாகத் தொடர்ந்து இரண்டாயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments