மது குடித்துவிட்டு வந்து அடித்துத் துன்புறுத்தியதால் விரக்தி.. கணவனுக்கு உணவில் விஷம் வைத்த மனைவி..! உஷாரானதால் தப்பிய கணவன்

0 9535

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குடிகார கணவனின் கொடுமை தாங்காமல் அவனுக்கு உணவில் விஷம் வைத்து கொலை செய்ய முயன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலஈராலைச் சேர்ந்த மாடசாமி - இந்திரா தம்பதிக்கு 12 வயதிலும் 8 வயதிலும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்திரா சமைத்த உணவை சாப்பிட்ட மாடசாமி, இரண்டு வாய் உள்ளே சென்றதும் வித்தியாசமான துர்நாற்றத்தை உணர்ந்திருக்கிறார்.

அக்கம்பக்கத்தினரிடம் காண்பித்தபோது, அதில் களைக்கொல்லி மருந்து கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாடசாமியை உடனடியாக மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளனர்.

மாடசாமி, நாள்தோறும் மது குடித்துவிட்டு வந்து இந்திராவை அடித்து துன்புறுத்துவது, அவரது ஆடைகளை உருவி தீயிட்டு கொளுத்துவது, தெருவில் வைத்து தலை முடியை பிடித்து அடிப்பது என அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தான் என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்து, அவனை கொலை செய்ய முயன்றதாக இந்திரா போலீசில் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments