மேட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு

0 12293

மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை 5 மணி அளவில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியாக அதிகரித்தது. இதையடுத்து 20 ஆயிரம் கனஅடி வீதம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மேலும்,மேட்டூர் அணைக்கான நீர்வரத்தைப் பொறுத்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட உள்ளது. எனவே காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அவர்களின் உயிர் மற்றும் உடமைகள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில்  மேட்டூர் அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக இந்த நீர் திறக்கப்பட்டுள்ளதால் மின் உற்பத்தியும் தொடங்கியுள்ளது.மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய பிறகு உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் பகுதியில் தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments