பாதிக்கப்பட்ட பகுதிகளை 2வது நாளாக பார்வையிட்ட முதலமைச்சர்... மக்களுக்கு நிவாரண உதவி
சென்னை மாநகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இரண்டாவது நாளாகப் பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
துறைமுகம் தொகுதி பக்கிங்ஹாம் கால்வாயை பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியதோடு, அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமையும் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து இராயபுரம், ஆர்.கே.நகர், பெரம்பூர், அன்னை சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்ற முதலமைச்சர், வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய அவர், நிவாரண உதவிகளை வழங்கியதோடு, தாழ்வான பகுதியில் தேங்கியிருக்கும் நீரை விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Comments