"கைகளை வெட்டுவேன்.. கண்களைப் பறித்து விடுவேன்" - மிரட்டிய பாஜக எம்பி

0 3425

ஹரியானா பாஜக எம்பி ஒருவர் எதிர்க்கட்சியினரையும், விவசாயிகளையும் மோசமாக விமர்சித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ரோத்தக் மாவட்டத்தில் பாஜகவைச் சேர்ந்த மனீஷ் க்ரோவர் என்பவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அரவிந்த் சர்மா என்பவரும் கோயிலுக்குச் சென்றனர். அப்போது அங்கு திரண்ட விவசாயிகள், இருவரையும் சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர்.

நீண்ட நேரத்திற்குப் பின் வெளியே வந்த அரவிந்த் சர்மா, மணீஷ் க்ரோவரை எதிர்ப்பவரின் கைகளை வெட்டுவேன் என்றும், கண்களைப் பறித்து விடுவதாகவும் மிரட்டினார். மேலும் விவசாயிகளை வேலையில்லா குடிகாரர்கள் என்றும் எம்.பி அரவிந்த் சர்மா விமர்சித்திருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments