செஞ்சி வராக நதியில் வெள்ளப்பெருக்கு, 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

0 2452

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், செவலபுரை அருகேயுள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கன கழையால் தற்போது வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. செவலபுரை - மேலச்சேரி இடையிலான தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளதால், செவலபுரை, வடபாலை, தொரப்பாடி, மேல்மாம்பட்டு தாதிகுளம் உள்ளிட்ட 11 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments