கர்நாடக கார்வார் துறைமுகம் அருகே படகில் தீப்பிடித்ததால் கடலில் தவித்த மீனவர்களை பாதுகாப்பாக மீட்ட இந்திய கடலோர காவல்படையினர்...

0 1920

கர்நாடக மாநிலத்தின் கார்வார் துறைமுகம் அருகே படகில் தீப்பிடித்ததால் கடலில் தவித்த மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

கார்வார் துறைமுகத்தில் இருந்து 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் 7 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இயந்திரப் பழுது காரணமாக திடீரென தீவிபத்து ஏற்பட்ட நிலையில், தீ படகில் மளமளவென பரவியது.

தகவலறிந்து விரைந்து சென்ற கடலோரக் காவல்படையினர், மீனவர்களை பத்திரமாக மீட்டதோடு, சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து போராடி தீயை அணைத்தனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments