114 அடியைத் தாண்டியது மேட்டூர் அணையின் நீர்மட்டம்

0 2320

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அணையின் நீர்மட்டம் 114 அடியாக உயர்ந்துள்ளது.

நேற்று 11 ஆயிரத்து 772 அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையில் 15 ஆயிரத்து 740 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 500 கன அடி நீரும், கிழக்கு மேற்குக் கால்வாய்ப் பாசனத்துக்கு 400 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

திறக்கப்படும் நீரைவிட வரத்து அதிகம் என்பதால் நேற்றுமுதல் இன்றுவரை ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது. இன்று காலை 8 மணிக்கு அணையின் நீர்மட்டம் 114 அடியாகவும், நீர் இருப்பு 84 புள்ளி 9 டி.எம்.சியாகவும் இருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments