மகாராஷ்டிரா மாநிலத்தில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு..!
மகாராஷ்டிரத்தின் அகமது நகர் மாவட்ட அரசு மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் தீப்பிடித்ததில் அங்குச் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 10 பேர் உயிரிழந்தனர்.
அகமதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சைப்பிரிவில் 20 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்குத் திடீரெனப் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து 4 வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்தியதுடன், மற்ற வார்டுகளுக்குப் பரவாமல் தடுத்தனர்.
எனினும் இந்தத் தீவிபத்தில் நோயாளிகள் 10 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர போசலே தெரிவித்துள்ளார். இது குறித்துத் தகவல் அறிந்த நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனை முன் குவிந்தனர்.
Comments