பெட்ரோல் நிரப்புவதில் பிரச்சனை ; பங்க் ஊழியர் மீது சரமாரி தாக்குதல்

0 5155
பெட்ரோல் நிரப்புவதில் பிரச்சனை ; பங்க் ஊழியர் மீது சரமாரி தாக்குதல்

திருப்பத்தூர் அருகே பெட்ரோல் நிரப்புவது தொடர்பான பிரச்சனையில் பெட்ரோல் பங்க் ஊழியரை இளைஞர்கள் சிலர் சரமாரியாகத் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

காளத்தியூரில் இயங்கி வரும் அந்த பெட்ரோல் பங்க்கில் மாடப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விக்கி என்பவர் பெட்ரோல் நிரப்பச் சென்றுள்ளார். ஊழியர் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருக்கும்போது, பெட்ரோல் நிரம்புவது கண்களுக்குத் தெரியவில்லை, எனவே அந்தக் குழாயை சற்று உயர்த்திப் பிடியுங்கள் எனக் கேட்டுள்ளார்.

அதற்கு பங்க் ஊழியர் மறுப்பு தெரிவிக்கவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பங்க் ஊழியர் ஆபாசமாகப் பேசியதாகக் கூறி, நண்பர்கள் இருவருடன் வந்த விக்கி, அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளைக் கொண்டு 3 இளைஞர்களையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments