சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் சிக்கிய வழக்கு ; கோசாவியை 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க புனே காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி

0 2890
கோசாவியை 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசுக்கு அனுமதி

மோசடி வழக்கில் கைதான கிரண் கோசாவியை, 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க புனே காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் சிக்கிய வழக்கில் கோசாவி உள்ளிட்டோர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். ஷாரூக்கான் மகன் ஆர்யன் கானுடன் செல்ஃபி எடுத்து பிரபலமான கோசாவி, புனே உள்ளிட்ட இடங்களில் மோசடி வழக்குகளில் சிக்கிய நிலையில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவரை வரும் 8ஆம் தேதி வரை காவலில் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஆர்யன் கான் ஆஜராகி கையெழுத்திட்டார்.

வாரந்தோறும் வெள்ளிக் கிழமையன்று, ஆஜராக நிபந்தனை விதித்து ஆர்யனுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்தது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments