மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை ; பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு

0 2630
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளான குருமலை, குளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு தினங்களாக பெய்துவரும் கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு ,பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

கரைபுரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளம், அடிவாரத்தில் அமைந்துள்ள திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலின் ஒரு பகுதியை சூழ்ந்தது. அருவிக்கு செல்லும் தரைப்பாலமும் காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கியது. பாதுகாப்பு கருதி கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments