திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவர்கள் குடும்ப நல நீதிமன்றங்களில் வழக்கு தொடர உரிமையில்லை ; சென்னை உயர்நீதிமன்றம்

0 4015
திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவர்கள் குடும்ப நல நீதிமன்றங்களில் வழக்கு தொடர உரிமையில்லை

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவர்கள், தங்களுக்குள் எழும் பிரச்சனைகளுக்கு குடும்ப நல நீதிமன்றத்தை நாட எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜோசப் பேபி என்பவர் தன்னை 2013ல் திருமணம் செய்ததாகவும், 2016ஆம் ஆண்டு முதல் அவர் தனியாக வசிப்பதால் தங்களை சேர்த்து வைக்கக்கோரி கோவையைச் சேர்ந்த கலைச்செல்வி என்பவர் தொடர்ந்த வழக்கு கோவை நீதிமன்றத்தில் தள்ளுபடியானது.

இதை எதிர்த்து கலைச்செல்வி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பணப் பரிவர்த்தனை குறித்த முன்விரோதத்தால் அவர் வழக்கு தொடர்ந்தார் என்பது ஆதாரங்களில் தெளிவாவதாக கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.

மேலும், இருவரும் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தியுள்ளதாக குறிப்பிட்ட நீதிமன்றம், லிவிங் டுகெதரில் வாழ்ந்தவர்கள், தங்கள் பிரச்சனைகளுக்கு குடும்ப நல நீதிமன்றத்தை நாட சட்டப்பூர்வ உரிமை இல்லை எனவும் தீர்ப்பில் தெளிவுப்படுத்தியது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments