மான்செஸ்டர் யுனைடெட், அட்லாண்டா அணிகள் மோதிய போட்டி, 2 கோல்கள் அடித்து "கிறிஸ்டியானோ ரொனால்டோ" அசத்தல்

0 3403

இத்தாலியில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் கோல் அடித்து தனது அணியை தோல்வியில் இருந்து மீட்டார்.

பெர்கமோ நகரில் நடைபெற்ற போட்டியில் உள்ளூர் அணியான அட்லாண்டா 12ஆவது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தது. அதற்கு பதிலடி தரும் விதமாக முதல் பாதி ஆட்டம் முடியும் தருணத்தில் மான்செஸ்டர் யுனைடெட்-டின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்தார்.

இரண்டாவது பாதியில் அட்லாண்டா அணி மீண்டும் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. ஆட்டம் நிறைவடைய 3 நிமிடங்கள் இருந்த போது ரொனால்டோ மின்னல் வேகத்தில் இரண்டாவது கோல் அடிக்க, போட்டி 2 க்கு 2 என்ற கோல் கணக்கில் டிரா-வில் முடிவடைந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments