தீபாவளியை முன்னிட்டு பிரத்யேகமாக தயாராகும் கார சேவு வகைகள்.. ஆர்வமுடன் வாங்கிச் செல்லும் மக்கள்

0 2597

தீபாவளியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் காரசேவு தயாரிக்கும் பணிகளில் இனிப்பு பலகார வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக உணவு பலகாரங்களில் சாத்தூரில் தயாரிக்கப்படும் காரசேவின் மவுசுக்கும், சுவைக்கும் காரணம் அப்பகுதிகளில் விளையும் மிளகாய் வத்தலும், வைப்பாற்றின் தண்ணீரும் தான் என கூறப்படுகிறது.

மேலும் மிளகு சேவு, சீரக சேவு, பட்டர் சேவு, சர்க்கரை சேவு, கருப்பட்டி சேவு உள்ளிட்ட பல வகையான சேவுகள் தயாரிக்கபடுவதால் மக்கள் அவற்றை விரும்பி வாங்கிச் செல்வதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments