அஜித்பவாரின் ரூ.1,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய ஐ.டி?

0 3355

மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு சொந்தமான சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2010ஆம் ஆண்டில் சதாரா மாவட்டத்தில், மாநில கூட்டுறவு வங்கி கட்டுப்பாட்டில் உள்ள சர்க்கரை ஆலை குறைந்த விலைக்கு ஏலத்தில் விடப்பட்டதாக புகார் எழுந்தது. அக்காலக் கட்டத்தில் கூட்டுறவு வங்கியின் இயக்குநர்கள் வாரியத்தில் முக்கிய உறுப்பினராக அஜித் பவார் இருந்த நிலையில், ஆலையை வைத்து வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இது குறித்து அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.மேலும், ஆலை தொடர்பான வரி ஏய்ப்பு புகாரில் அஜித் பவாரின் சகோதரிகள் உள்ளிட்டோரின் இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த மாதம் சோதனை நடத்தினர். இந்நிலையில் அஜித் பவாருக்கு சொந்தமாக மும்பையில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் உள்ளிட்ட 5 சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments