மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் இரு கண்கள் மூலம் 4 பேர் பார்வை பெற்றுள்ளதாக தகவல்

0 8445
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் இரு கண்கள் மூலம் 4 பேர் பார்வை பெற்றுள்ளதாக தகவல்

தானமாக வழங்கப்பட்ட மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் இரு கண்கள் மூலம் 4 பேர் பார்வை பெற்றுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

உயிருடன் இருக்கும்போது பல்வேறு உதவிகளைச் செய்து வந்த நடிகர் புனித் ராஜ்குமார், இறப்பிற்குப் பிறகு தனது கண்களையும் தானமாக வழங்கி அனைவரையும் நெகிழவைத்துள்ளார். புனித் ராஜ்குமாரின் இரண்டு கண்களும் பெங்களூருவிலுள்ள நாராயண நேத்ராலயா கண் வங்கியில் சேமித்து வைக்கப்பட்டன.

நவீன தொழில்நுட்பம் மூலம் 4 பாகங்களாகப் பிரிக்கப்பட்ட கண்கள், சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் கொண்ட 4 பேருக்குப் பொருத்தப்பட்டுள்ளன என்றும் அதன் மூலம் புனித் ராஜ்குமாரால் 4 பேர் பார்வை பெற்றுள்ளனர் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments