ஏடிஎம் இயந்திரம் ஒன்றில் 200 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் வந்ததை அடுத்து அந்த ஏடிஎம் மையம் மூடப்பட்டது

0 25812
ஏடிஎம் இயந்திரம் ஒன்றில் 200 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் வந்ததை அடுத்து அந்த ஏடிஎம் மையம் மூடப்பட்டது

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் கனரா வங்கி ஏடிஎம் இயந்திரம் ஒன்றில் 200 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் வந்ததை அடுத்து அந்த ஏடிஎம் மையம் மூடப்பட்டது.

ஸ்ரீவைகுண்டத்தில் தூத்துக்குடி மெயின் ரோடு பகுதியில் உள்ள அந்த ஏடிஎம் மையத்தில் இன்று காலை 200 ரூபாய் எடுக்க முயன்றவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக 500 ரூபாய் நோட்டுகள் வந்துள்ளன.

இதனை அடுத்து, தகவலறிந்த வங்கி ஊழியர்கள், ஏடிஎம் மையத்தை உடனடியாக மூடிவிட்டு இயந்திரத்தை திறந்து பார்த்த போது, 200 ரூபாய் நோட்டுகள் இருக்க வேண்டிய பெட்டியில் 500 ரூபாய் தவறுதலாக நிரப்பப்பட்டதை கண்டறிந்தனர்.

இந்நிலையில், ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்தவர்கள் தொடர்பாக காவல்துறையினர் வங்கியில் விவரங்கள் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments