கிருஷ்ணகிரியில் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் மோசடி செய்த பள்ளி ஆசிரியருக்கு 2 ஆண்டுகள் சிறை - சிபிஐ சிறப்பு நீதிமன்றம்!

0 1738

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்த விவகாரத்தில் உயர் நிலை பள்ளி ஆசிரியருக்கு 2ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் ஸ்ரீராமன் என்பவருடன் இணைந்து 26 பேரிடம் 37 லட்ச ரூபாய் அளவிற்கு பணம் மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் சிபிஐ காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

ஸ்ரீராமன் தலைமறைவானதை அடுத்து ஆசிரியர் ஆதிமணி மீதான வழக்கை தனியாக பிரித்து விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments