தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை

0 6472

தொடர் மழை காரணமாக, தமிழகத்தின் 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென் மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில், தொடர் மழை காரணமாக, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவதால், அங்கும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments