பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படும் புகாரில் மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு விசாரணை -  உச்சநீதிமன்றம்!

0 2047

பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படும் புகாரில் உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், குழுவின் விசாரணையை உச்சநீதிமன்றமே நேரடியாக கண்காணிக்கும் என்றும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் குழு செயல்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் சுதந்திரமான விசாரணை நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments