ஒகேனக்கல்லில் காவிரியில் நீர்வரத்து 35 ஆயிரம் கன அடியாக குறைந்தது

0 2062
ஒகேனக்கல்லில் காவிரியில் நீர்வரத்து 35 ஆயிரம் கன அடியாக குறைந்தது

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் காவிரியில் நீர்வரத்து 35 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது.

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் நேற்றுத் தமிழக எல்லையான பிலிக்குண்டுலுவில் நீர்வரத்து 40 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 35 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது. ஒகேனக்கல்லில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துப் பாய்வதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்கவும் தொடர்ந்து தடை நீடிக்கிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments