பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக்கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு

0 1414
பெகாசஸ் ஸ்பைவேர் மூலம், முக்கிய பிரமுகர்களை உளவு பார்த்ததாக கூறப்படும் விவகாரம்

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக்கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது.

இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் மென்பொருள் மூலம் அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரின் தொலைபேசி உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சுதந்திரமான விசாரணை நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தொழில்நுட்ப நிபுணர்களை கொண்ட குழு அமைக்க நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது.

இந்நிலையில், தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments