படம் எடுப்பவரை பதிலுக்குப் படம் எடுத்து மிரட்டும் நாகப்பாம்பு : கதவிடுக்கில் அமர்ந்துகொண்டு ஆக்ரோஷம்

0 3106

வீட்டின் கதவிடுக்கில் அமர்ந்துகொண்டு தன்னைப் படம் எடுப்பவரை பதிலுக்குப் படம் எடுத்து மிரட்டும் நாகப்பாம்பு ஒன்று அவரைத் தாக்க முயற்சிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் தெரியாத நிலையில் பாம்பின் ஆக்ரோஷத்தை லட்சக்கணக்கானோர் கண்டு ரசித்து வருகின்றனர்.

நல்ல பாம்பு என்று அழைக்கப்படும் நாகப்பாம்புகள் போன்ற சில வகைப் பாம்புகளின் கழுத்துப் பகுதியில் விரியக்கூடிய தசை காணப்படுகிறது.

தங்களைத் தாக்கும்போதோ, தற்காப்புக்கோ கழுத்துத் தசையை விரித்து, எதிரியிடமிருந்து தற்காத்து கொள்ள அவை முனைகின்றன. அதனையே படம் எடுத்தல் எனக் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments