ஸ்பா என்றாலே பாலியல் தொழில் நடக்கும் இடம் என்று தான் பார்ப்பீர்களா.? காவல்துறையினருக்கு நீதிபதி கண்டனம்

0 2937

ஸ்பா என்றாலே பாலியல் தொழில் நடக்கும் இடம் என்ற கண்ணோட்டத்தில் தான் பார்ப்பீர்களா? என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், காவல்துறையினர் தங்களுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக கண்டனம் தெரிவித்தது.

தாம்பரம் வில்லோஸ் ஸ்பா உரிமையாளர் தாக்கல் செய்த வழக்கு விசாரணையின் போது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த கருத்தை கூறியுள்ளார். அப்போது தாம்பரம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர்.

இதையடுத்து, மசாஜ் நிலையங்களில் விதிமீறல்கள் நடைபெறுவதாக புகார்கள் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, மிரட்டும் நோக்கில் செயல்பட கூடாது என காவல்துறையினருக்கு அறிவுறுத்தி விசாரணையை நவம்பர் 12 ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments