பாம்பனில் கடல் பகுதி உள்வாங்கியதால், தரைதட்டி நின்ற 60க்கும் மேற்பட்ட படகுகள்..!

0 2646

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் வடக்கு கடல் பகுதி உள்வாங்கியதால், அதில் நிறுத்தப்பட்டிருந்த பல படகுகள் தரைதட்டி நின்றன.

இன்று காலை முதல் பாம்பன் பகுதியில் திடீரென கடல் 300 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதனால், கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அறுபதிற்கும் மேற்பட்ட மீன்பிடி நாட்டுப் படகுகள் மற்றும் சிறிய வள்ளங்கள் தரைதட்டி ஒன்றோடு ஒன்று மோதியது. இதனை அடுத்து, படகுகளை பாதுகாப்பாக மீட்கும் பணியை மீனவர்கள் மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments