சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகைக்கு முறையான கணக்கு இருக்கிறது - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

0 4353

சொத்து குவிப்பு வழக்கில் போக்குவரத்துத்துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணைக்கு 2ஆவது நாளாக ஆஜரானார்.

நேற்று 8 மணி நேரம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை இன்று 3 மணி நேரம் விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கூறப்படும் தொகைக்கு முறையான கணக்கு இருப்பதாகவும், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments