சென்னையில் மென்பொருள் நிறுவன ஊழியரை கடத்தி ஒரு மாதம் அடைத்து வைத்து துன்புறுத்தியதாக 5 பேர் கைது!

0 7362

சென்னையில் 50 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரிக்க மென்பொருள் நிறுவன ஊழியரை கடத்தி ஒரு மாதம் அடைத்து வைத்து துன்புறுத்தியதாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை ஆலந்தூரில் உள்ள சொத்தை விற்க வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வம்சி கிருஷ்ணாவை, ரியல் எஸ்டேர் அதிபர் பாலாஜி தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து நிலத்திற்கான பொது அதிகாரம் மற்றும் ஆவணங்களை பெற்றுக் கொண்டு கடத்தி தனியார் விடுதியில் அடைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

மகன் காணாமல் போனது குறித்து தாய் அளித்த புகாரில் விருகம்பாக்கம் போலீசார் வம்ஷி கிருஷ்ணாவை மீட்டு ரியல் எஸ்டேட் அதிபர் பாலாஜி உள்பட 5 பேரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments