முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான நடிகையின் பாலியல் புகார் - 341 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்!

0 2299

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் வழக்கில் அவர் மீது 341 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அடையாறு அனைத்து மகளிர் போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.

நடிகை அளித்த பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார்.

இந்த நிலையில், மணிகண்டன் மீது போடப்பட்ட வழக்கில் 341 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ள போலீசார், ஏற்கனவே பதிவு செய்யபட்ட 6 பிரிவுகளுடன் சேர்த்து “சட்டவிரோதமாக சிறைபிடித்தல், தாக்கி காயம் ஏற்படுத்துதல்” என மேலும் இரண்டு பிரிவுகளை சேர்த்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இவற்றுடன் “ஆதாரங்களை அழித்தல்” என்ற மற்றொரு பிரிவை சேர்க்க உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டிய நடிகையோடு சேர்த்து மணிகண்டனுக்கு எதிராக 5 பேர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments