சென்னையில் மெட்ரோ வாட்டர் மீட்டர்களை திருடி விற்ற 4 பேர் கைது!

0 2462

சென்னை, பம்மல் அருகே அரசு வழங்கிய மெட்ரோ வாட்டர் மீட்டர்களை திருடி விற்ற நான்கு பேர் சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.

கஸ்தூரிபாய் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு வாட்டர் மீட்டர்கள் திருடு போனதாக போலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளை வைத்து அனகாபுத்தூரை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள் இதுவரை 42 வீடுகளில் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள மெட்ரோ வாட்டர் மீட்டர்களை திருடியதாகவும் அதனை பழைய இரும்பு கடை நடத்தி வரும் வினோத், என்பவரிடம் விற்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதன் காரணமாக வினோத்தையும் போலீசார் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments